புதன், 15 ஆகஸ்ட், 2012

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா

வில்லங்கம் இல்லாத வீட்டுமனை வேண்டுமா? 

 ''இப்போதெல்லாம் போலி வாக்குறுதிகளை நம்பி இடம் வாங்கி ஏமாறுவது பெருகி வருகிறது. அதற்கு மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லாததுதான் காரணம். இடம் வாங்குவதில் உள்ள சட்டக் கூறுகள் தெரியாமல் ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்ளும் மக்கள் பலர். ஓர் இடம் வாங்க முடிவு செய்து விட்டால், பத்திரப் பதிவுக்கு முன் பரிசீலிக்க வேண்டிய 13 முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்''

 இடம் வாங்கும்போது முதலில் பார்க்க வேண்டியது... வில்லங்கப் பத்திரம். குறைந்தபட்சம் அந்த நிலத்தைப் பற்றிய 30 ஆண்டு கால பத்திர விவரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, தகுந்த கட்டணம் செலுத்திப் பெற்று, அதை சட்ட ஆலோசகர் மூலம் படித்துப் பார்த்து, எந்த ஒரு வில்லங்கமும் இல்லையெனில் அடுத்த படி ஏறலாம்.

 குறிப்பிட்ட இடம் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரின் உள்ளாட்சி அலுவலகத்தில் சென்று இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 அந்த இடத்துக்கான வரி முறையாக, தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும் மேற்படி அலுவலகத்தின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

 இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாகப் படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தில் இருக்கும் உரிமையாளர்தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 இடம் தொடர்பாக பொது அதிகார பத்திரம் (பவர்) வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

 குறிப்பிட்ட மனையின் வரை படம் பெறுவது முக்கியம். இதற்கு முன்பு அந்த இடத்தில் கிணறு, குட்டை, குழி, போன்றவை இருந்து மூடப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். அது தெரியாமல் அங்கு வீட்டைக் கட்டினால், மழைக்காலத்தில் வீடு உள் இறங்கிவிடும்.

 சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும்.

 இடம் விற்பவரின் போட்டோ ஐ.டி. புரூஃப்-ஐ செக் செய்ய வேண்டும்.

 லே - அவுட் மேப் கட்டாயம் வாங்கிப் பார்க்க வேண்டும். ஒரு லே-அவுட் போடுகிறார்கள் என்றால்... ஸ்கூல், நீச்சல் குளம், வாட்டர் டேங்க் போன்றவை எங்கெங்கே வரப்போகின்றன என்பதையெல்லாம் குறிப்பிட்டு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்ற பிறகே அதற்கான அனுமதி கிடைக்கும். இந்த தகவல்கள் எல்லாம் லே-அவுட் மேப்பில் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.

 இடத்தை விற்பவரின் ரத்த சொந்தங்களுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடை இல்லாச் சான்று பெற வேண்டும்.

 கைடு - லைன் வேல்யூ (ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை) தெரிந்துகொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது இணையதளம் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

 அக்ரிமென்ட் போடும் பட்சத்தில், அதையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது. 

 எல்லாவற்றுக்கும் இடைத்தரகரையே முன்னிறுத்தாமல், விலை உள்ளிட்ட பல விஷயங்களையும் விற்பனையாளரிடம் நேரடியாகப் பேசுவதே நல்லது. இது பல வகையில் நாம் ஏமாறாமல் காப்பாற்றும்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரெவினியூ விதிகளுக்கு புறம்பாக வட்டாட்சியர் பட்டா மாறுதல்கள் செய்து வருவதாக தெரிய வருவதால் தடுக்க கோரி...

இயற்கை நீதிக்கும்,ரெவினியூ விதிகளுக்கு புறம்பாக வட்டாட்சியர் பட்டா மாறுதல்கள் செய்து வருவதாக தெரிய வருவதால் தடுக்க கோரி மனு.

கா.செந்தில்குமார் அவர்களின் அனுபவத்தின் அத்துமால் படி இராமநாதபுரம்
மாவட்டம், பால்கரை சாலையி்ல் டாடா ஷோரூம் அருகில் உள்ள இடம்., அச்சடிப்பிரம்பு குரூப் புல எண்.110/1A1
-ல் விஸ்தீரணம் 13.68.5
ஹெக்டோ் நிலத்தில் வட்டாட்சியர் அவர்களால் புலத்தணிக்கை செய்யப்பட்டு 6ஏக்கர் நிலம் புல உட்பிரிவு 110/1A1B என்று தனிப்பட்டா நம்பர்.1314 என வழங்கப்பட்டுயிறுந்தது.

கா.செந்தில்குமார் மேல்முறையீட்டு தாக்கல் செய்ததில் DRO அவர்கள் ந.க. பி5/9310/2012 ஆதாரங்களை பரிசீலனை செய்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள குறைகள் எதுவும் சரியான ஆதாரப்படி நிரூபிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது என்றும் இறுதி விசாரணை முடியும் வரையிலும் RDO செயல்முறை ஆணை எண். ந.க.அ6/7207/2011 நாள்.06.02.2012 பிறப்பிக்கப்பட்டுள்ள உத்திரவுக்கு தடையாணை வழங்கி உத்திரவிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் நிலத் தாவா இருந்த நிலையில் தற்பொழுது அதனை மறைத்து
கா.செந்தில்குமார் அவர்களின் இடத்தை போலி ஆவணம் மூலம் விற்பணை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள Real-Estate சங்கம் மற்றும் தொழில் செய்துவரும் R.Jeyapandian க்கு ஆதரவாக பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது(R.Jeyapandian 8ஏக்கர் நிலத்தை வெல்கம் சிட்டி என்ற பெயரில் பிளாட்டுகள் பதிவு செய்ய உள்ளதாக தெரியவருகிறது அனைத்து நிலங்களும் Stay -ல் உள்ளது ). மற்றும் கா.செந்தில்குமார் பட்டா நம்பர் 1314 வட்டாட்சியர் அலுவலக இணைய சேவை கணினியிலும் காணவில்லை என்பது தெரியவருகிறது.

உதவி மற்றும் முறையான தகவல்கள் தேவைப்படுகிறது.