வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ரெவினியூ விதிகளுக்கு புறம்பாக வட்டாட்சியர் பட்டா மாறுதல்கள் செய்து வருவதாக தெரிய வருவதால் தடுக்க கோரி...

இயற்கை நீதிக்கும்,ரெவினியூ விதிகளுக்கு புறம்பாக வட்டாட்சியர் பட்டா மாறுதல்கள் செய்து வருவதாக தெரிய வருவதால் தடுக்க கோரி மனு.

கா.செந்தில்குமார் அவர்களின் அனுபவத்தின் அத்துமால் படி இராமநாதபுரம்
மாவட்டம், பால்கரை சாலையி்ல் டாடா ஷோரூம் அருகில் உள்ள இடம்., அச்சடிப்பிரம்பு குரூப் புல எண்.110/1A1
-ல் விஸ்தீரணம் 13.68.5
ஹெக்டோ் நிலத்தில் வட்டாட்சியர் அவர்களால் புலத்தணிக்கை செய்யப்பட்டு 6ஏக்கர் நிலம் புல உட்பிரிவு 110/1A1B என்று தனிப்பட்டா நம்பர்.1314 என வழங்கப்பட்டுயிறுந்தது.

கா.செந்தில்குமார் மேல்முறையீட்டு தாக்கல் செய்ததில் DRO அவர்கள் ந.க. பி5/9310/2012 ஆதாரங்களை பரிசீலனை செய்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கையில் குறிப்பிட்டுள்ள குறைகள் எதுவும் சரியான ஆதாரப்படி நிரூபிக்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது என்றும் இறுதி விசாரணை முடியும் வரையிலும் RDO செயல்முறை ஆணை எண். ந.க.அ6/7207/2011 நாள்.06.02.2012 பிறப்பிக்கப்பட்டுள்ள உத்திரவுக்கு தடையாணை வழங்கி உத்திரவிட்டிருந்தார்.

நீதிமன்றத்தில் நிலத் தாவா இருந்த நிலையில் தற்பொழுது அதனை மறைத்து
கா.செந்தில்குமார் அவர்களின் இடத்தை போலி ஆவணம் மூலம் விற்பணை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள Real-Estate சங்கம் மற்றும் தொழில் செய்துவரும் R.Jeyapandian க்கு ஆதரவாக பட்டா வழங்க ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது(R.Jeyapandian 8ஏக்கர் நிலத்தை வெல்கம் சிட்டி என்ற பெயரில் பிளாட்டுகள் பதிவு செய்ய உள்ளதாக தெரியவருகிறது அனைத்து நிலங்களும் Stay -ல் உள்ளது ). மற்றும் கா.செந்தில்குமார் பட்டா நம்பர் 1314 வட்டாட்சியர் அலுவலக இணைய சேவை கணினியிலும் காணவில்லை என்பது தெரியவருகிறது.

உதவி மற்றும் முறையான தகவல்கள் தேவைப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக